MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஐங்கால முன் பின் சுன்னத்து தொழுகைகள்


இதன் முக்கியத்துவம்


நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:



"நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி,” என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே  கணக்கின்  அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுவான்."


நூல் : தாரமீ


நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:



“அல்லாஹ் கூறினான்: எனது அடியான் நபில்களின் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான். அவனை நான் நேசிக்கிறேன். அவனை நேசிக்க ஆரம்பித்தால் அவன் கேட்கும் செவியாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக ஆகிவிடுகிறேன். அவன் என்னிடம் எதையேனும் கேட்டால் கொடுக்கிறேன். அவன் தன்னை பாதுகாக்கத் தேடினால் அவனை நான் பாதுகாக்கிறேன்.”



நூல் : ஸஹிஹுல் புஹாரி


எனவே, ஐந்து நேர பர்ளான தொழுகைகளுக்கு முன் பின் தொழும் சுன்னத்து தொழுகைகள் மிகவும் முக்கியமானவை.


இதனால் கிடைக்கும் நன்மைகள்:


♦ அல்லாஹ்வின் அன்பையும்  நெருக்கத்தையும் பெற்றுத்தரும்.

♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் வழிமுறையை பின்பற்றுவதால் அன்னவர்களின் அன்பை பெற்று தரும்.

♦ நாளை மறுமையில் எமது பர்ளுகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்.

♦ எமது நன்மை கணக்கை அதிகப்படுத்தி உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத்தரும்.

♦ அல்லாஹ்விடம் கேட்கும் துஆக்கள் எல்லாம் நிறைவேற்றிக்கொடுக்கப்படும்.



ஐந்து நேர தொழுகையின் முன் பின் சுன்னத்தான தொழுகைகளின் விபரம்:


                                                               பர்ளு                                   முன் சுன்னத்                        பின் சுன்னத்

சுப்ஹ் தொழுகை                        2                                                       2                                                     - 


ழுஹர் தொழுகை                      4                                             2   +  2 = 4                                         2


அஸ்ர் தொழுகை                        4                                                       4                                                   -


மக்ரிப் தொழுகை                       3                                                       2                                                  2 ♣ 


இஷா தொழுகை                        4                                                        2                                                 2


மொத்தம்                              17                                4             +  10            =  14                            6           



சுன்னத் முஅக்கதா - வலியுறுத்தப்பட்ட சுன்னத்


சுன்னத் ஙைரு  முஅக்கதா - வலியுறுத்தப்படாத சுன்னத்



எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?


உதாரணமாக - ழுஹரின் முன் சுன்னத் இரண்டு ரக்அத் தொழும்போது -

“ழுஹரின் முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்துகளை கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” 


உதாரணமாக - இஷாவின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழும்போது -

“இஷாவின் பின் சுன்னத்தான இரண்டு ரக்அத்துகளை கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்”



எப்படி தொழ வேண்டும்?


சாதாரண தொழுகை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும். இரண்டு இரண்டு ரக்அத்துகளாக தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும். தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.


மேலும் பல தொழுகை முறைகளை எமது இணையத்தளமான www.mailofislam.com இல் கற்று கொள்ளுங்கள்.